சிதம்பரம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக கூடுதல் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் வாக்கு சேகரிக்கும் போது மேலரதவீதியில் மா.சந்திரகாசி தனது வாகனத்துடன், 100 மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்ததால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக தேர்தல் ஆணைய நிலை கடுங்கண்காணிப்புக்குழு அலுவலர் பொன்னி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி மீது வழக்குப் பதிந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்

கேட்ட காமராஜர்! மறுத்த தீர்த்தகிரியார்!

கிராமப்புறங்களில் குடிநீா் ஆதாரங்கள் மேம்படுத்தப்படுமா?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

