நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் அருகே ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பாத்திரங்கள் பறிமுதல்!

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை அலுவலரும், புள்ளியியல்துறை ஆய்வாளருமான ஆர்.சிவக்குமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை

News image
Updated On :13 ஏப்ரல் 2014, 1:18 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே போதிய ஆவனங்கள் இன்றி மினிடோர் லாரியில் கொண்டு வந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பாத்திரங்களை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை அலுவலரும், புள்ளியியல்துறை ஆய்வாளருமான ஆர்.சிவக்குமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை சேத்தியாத்தோப்பு- வடலூர் இடையே பின்னலூர் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினிடோர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் போதிய ஆவனங்கள் இன்றி சாதம் வடிக்க பயன்படுத்தும் பாத்திரமான நூற்றுக்கும் மேற்பட்ட அன்னக்கூடைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் பறக்கும்படையினர் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பாத்திரங்கள் மற்றும் மினிடோர் லாரியை பறிமுதல் செய்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.