கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அணை கட்டும் இடங்களை மனைக்கட்டுகளாக மாற்றியது திராவிடக் கட்சிகள்: ஜி.கே.வாசன்

சிவகங்கை தொகுதியில்  மத்திய நிதிஅமைச்சர் ப. சிதம்பரம்   மக்களவை உறுப்பினரான பிறகுதான் இத்தொகுதி  அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.  அனைத்து துறை திட்டங்களும் 100 சதம்

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 10:46 am

பார்திபன்

தமிழகத்தில் அணை கட்டும் இடங்களை எல்லாம் மனைக்கட்டுகளாக மாற்றியதுதான் திராவிடக் கட்சிகளின்  சாதனை என்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்தை ஆதரித்து மேலும் அவர் பேசியதாவது:

சிவகங்கை தொகுதியில்  மத்திய நிதிஅமைச்சர் ப. சிதம்பரம்   மக்களவை உறுப்பினரான பிறகுதான் இத்தொகுதி  அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.  அனைத்து துறை திட்டங்களும் 100 சதம் மக்களைச் சென்றடைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களின்  வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.  சிவகங்கை தொகுதியை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் வளர்ச்சி தெரியாது. ஆனால், பிற தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்தொகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை உணரமுடியும்.

தமிழ்நாட்டில்  அனைவருக்குகம் கல்வி கிடைக்கவும், அணைக்கட்டுகளை அமைத்து தண்ணீர் பிரச்னைகளை  தீர்க்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்கவும்  முன்னாள் முதல்வர் காமராஜர் அடித்தளம் அமைத்தார்.ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள்  அணைக்கட்டுகளுக்கான நிலங்களை மனைக்கட்டுகளாக்கியதும், டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு மக்களை மதுபோதைக்கு அடிமையாக்கியதும்தான் திராவிடக் கட்சிகளின் சாதனை.ஆகவே,நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தொகுதியின் வளர்ச்சிக்கான வாக்கு என்பதை உணர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

மாவட்டத் தலைவர் புஷ்பராஜ்,வட்டாரத் தலைவர்கள் சுந்தரம்,ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.