கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மோடிக்கு வாக்களித்து இந்தியாவின் பிரதமர் ஆக்குங்கள்: விஜயகாந்த்

பா.ஜ.க வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமராக ஆக்க நீங்கள் எங்கள் வேட்பாளர் மாசிலாமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். சென்னை நங்கநல்லூர் மார்க்கெட்டில் செவ்வாய்க் கிழமை இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக் கூட்டம்  நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2014, 4:28 pm

குமார்

பா.ஜ.க வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமராக ஆக்க நீங்கள் எங்கள் வேட்பாளர் மாசிலாமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேட்டு கொண்டார்

சென்னை நங்கநல்லூர் மார்க்கெட்டில் செவ்வாய்க் கிழமை இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு மற்றும் பொது கூட்டம்  நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு விஜயகாந்த பேசியதாவது:

காங்கிரஸ் 10ஆண்டுகள் ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை மேலும் ஊழலை தடுக்க முடியவில்லை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியவில்லை. எனவே, மக்களுக்கு நன்மை செய்யும் பா.ஜ.க வேட்பாளர்.

நரேந்திர மோடியை நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும் அவரிடம் நான் சில கோரிக்கைகள் வைத்துள்ளேன் அதை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தயுடன் நிறைவேற்றி தருவதாக தெரிவித்துயுள்ளோர் அதில் தமிழகத்து நல்ல குடி தண்ணீர் வசதி, தடையில்லா மின்சார வசதி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை கொடுத்துள்ளேன். இந்த நன்மைகள் கிடைத்திட நீங்கள் நமது ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாசிலாமணிக்கும் பம்பரம் சின்னத்திற்கும் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளர் காமராஜ்க்கு முரசு சின்னத்திற்கும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.