47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுக, திமுக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும்: தா. பாண்டியன்

ஆளும் கட்சியான அதிமுக, பணம் படைத்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன். நாகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :

News image
Updated On :22 ஏப்ரல் 2014, 6:56 am

சங்கர்

ஆளும் கட்சியான அதிமுக, பணம் படைத்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன். நாகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :

ஆளும் கட்சியான அதிமுகவும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. இதைத் தடுக்க முயலும், இடதுசாரி தொண்டர்கள் தாக்கப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் செயலும் நடைபெறுகிறது.

தேர்தல் விதி மீறல்களைத் தடுக்க வேண்டிய காவல் துறை, அதிமுக அரசின் துணைப் படை போல செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. இது குறித்து தேர்தல் ஆணையம் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார் தா. பாண்டியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.