47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை 72 சதவீதம் வாக்குகள் பதிவு

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத்

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 12:08 pm

சங்கர்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை 72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1,582 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாளுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வாக்குப் பதிவு தொடக்கத்தில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக, பாபநாசம், சீர்காழி ஆகிய பகுதிகளில் 3 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு, வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் வாக்குப் பதிவு காலையிலிருந்து சுமார் 11 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் 9 மணி வரை 19 சதவீதமும், காலை 11 மணி வரை 33 சதவீதமும், பகல் 1 மணி வரை 49 சதவீதமும், பிற்பகல் 3 மணி வரை 60.5 சதவீதமும், பிற்பகல் 5 மணி வரை 72 சதவீதமும் இத்தொகுதியில் வாக்குகள் பதிவாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.