மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்

அறந்தாங்கியில் இருந்து ஆலங்குடி நோக்கி  ஞாயிற்றுக்கிழமை காலையில் சுமார் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து  புறப்பட்டது.அப்போது ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி

News image
Updated On :3 ஆகஸ்ட் 2014, 10:52 am

பார்திபன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசுப்பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில்  20 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.

அறந்தாங்கியில் இருந்து ஆலங்குடி நோக்கி  ஞாயிற்றுக்கிழமை காலையில் சுமார் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து  புறப்பட்டது.அப்போது ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது சாலை வளைவில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட்ட போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த  ராமாயி (55),ரமாமணி(65), கணேசன்(60), முகமதுபாருக்(35),சாந்தி(35) உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.