மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆலங்குடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு

ஆலங்குடி அருகேயுள்ள  மூக்கம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையா மகன் ஆனந்தராஜ் (27).லாரி ஒட்டுநரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு  மேலவிடுதியில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு

News image
Updated On :4 ஆகஸ்ட் 2014, 2:01 pm

பார்திபன்

ஆலங்குடி அருகே நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

ஆலங்குடி அருகேயுள்ள  மூக்கம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையா மகன் ஆனந்தராஜ் (27).லாரி ஒட்டுநரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு  மேலவிடுதியில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நள்ளிரவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.அப்போது  செம்பட்டிவிடுதி முருகராஜ் நகர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் அவ்வழியாக நடந்து சென்ற  கீழப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ரஞ்சித் (19)  மீது மோதியது.

இதில் நடந்து சென்ற  ரஞ்சித்தும்,மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த ஆனந்தராஜ் ஆகிய இருவரும் அந்த இடத்திலே துடிதுடித்து  இறந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த செம்பட்டிவிடுதி காவல் ஆய்வாளர் மதியழகன் சடலங்களை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.