டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவேற்காடில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: வடமாநில தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலி

சென்னை திருவேற்காடில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாயினர்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2014, 2:48 am

ராஜேஷ்

சென்னை திருவேற்காடில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாயினர்.

சென்னை பூந்தமல்லி அருகே திருவேற்காடில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதில் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட பலர் தங்கி பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உள்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

அவர்கள் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அமர் (23), ராஜ் (22), திருச்செந்தூரைச் சேர்ந்த ரகு (26) காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரத்குமார் (26) என அடையாளம் காணப்பட்டனர். தீவிபத்து குறித்து அறிந்து, 15 தீயணைப்பு வாகனங்களில் வந்து மீட்புப் படையினர் தீயை அணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.