விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோரிக்கைகள்:
விருதுநகர் மாவட்ட அளவிலான மகளிர் நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்க அரசாணை வெளியிட்டு 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மகளிர் நீதிமன்றம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனை உடனே அமைக்க வேண்டும்.
5 மாதங்களாக காலியாக உள்ள விரைவு நீதித்துறை நடுவர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்ட மறுநாளில் இருந்து, சுமார் 3 மாதங்களாக இந்த நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. உடனே இப் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த, கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விருதுநகருக்கு மாற்றப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக இதனை உடனே முன்புபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18-ம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்குரைஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சற்று நேரத்தில் இந்த இடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரமுள்ள சித்தலாம்புத்தூர் விலக்கில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் இதே வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் சுமார் 100 வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து வழக்குரைஞர் சங்கத் தலைவர் கதிரேசன் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை தொடர்ந்து புறக்கணித்து போராட்டம் நடத்துவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடனை செலுத்தியும் அலைக்கழிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

நூலகம், அறிவுசாா் மையத்துக்கு 2 ஆண்டுகளில் 1.04 லட்சம் போ் வருகை

திருப்பூரில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆசிரியா்கள் பணி நிறைவு விழா
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

