அங்கு பணியிலிருந்த எஸ்.சிவக்குமார் (40), டி.சிவக்குமார் (52), எஸ்.சுரேஷ் (40), முத்துப்பாண்டி (35) ஆகியோர், குறிப்பிட்ட நகையை மதுரையில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டதாகக் கூறியுள்ளார்கள். அசல், வட்டியைச் செலுத்தினாலும் 6 மாதம் கழித்துதான் நகையைத் திருப்ப இயலும் என்ற பொய்யான காரணத்தைக் கூறி நகையை அபகரிக்க முயற்சித்தார்களாம்.ஏனைய நகைகளுக்கு வட்டியைச் செலுத்த செல்லும் போதெல்லாம், குறிப்பிட்ட செயினை தொடர்ந்து கேட்டுள்ளார்கள். மதுரையிலிருந்து செயின் வரவில்லை என்றே கூறி வந்துள்ளார்கள். முனீஸ்வரனும் அவரது மனைவி பெர்ஸியா மாணிக்கமும் 18.10.2014-ம் தேதி மதுரை அண்ணாநகரில் உள்ள இவர்களின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த மண்டல மேலாளர் குருபுத்திரனிடம் விவரம் கேட்டுள்ளார்கள். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையிலிருந்து குறிப்பிட்ட செயின் தங்களுக்கு வரவேயில்லை. நகை சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.