கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோபி அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமசாமி (44) என்பருக்கும் கடந்த 19

News image
Updated On :10 டிசம்பர் 2014, 10:22 am

குமார்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமசாமி (44) என்பருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராமசாமி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் சாமியாத்தாள் கணவரிடம் கோபித்து கொண்டு கடுதாம்பாடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து ராமசாமி மனைவியை குடும்பம் நடத்த பலமுறை சென்று அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மாமியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ராமசாமி செவ்வாய்க்கிழமை இரவு மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். அப்போது மாமியார் அருக்காணி உன்னுடன் இனிமேல் அவள் குடும்பம் நடத்த வரமாட்டாள் என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அருக்காணியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அருக்காணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தப்பி சென்ற ராமசாமியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறுவலூர் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.