எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் இருவர் மாயம்

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து மாரியப்பன் என்பவரது படகில் அவரும், ரத்தினசாமி, வெங்கடேசன் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

News image
Updated On :30 டிசம்பர் 2014, 5:32 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து மாரியப்பன் என்பவரது படகில் அவரும், ரத்தினசாமி, வெங்கடேசன் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

கடல் கடும் சீற்றமாக காணப்பட்ட நிலையில், நடுக்கடலில் படகு தலைக்கீழாக கவிழந்துவிட்டதால், அதிலிருந்த மூவரும் கடலுக்குள் மூழ்கினர்.

மாரியப்பன் மட்டும் நீந்தி கரையேறியுள்ளார். மற்ற இருவரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தகவலின்பேரில் போலீஸார், நடக்க முடியாமல் கரை ஒதுங்கிக் கிடந்த மாரியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மற்ற இருவரை தேடும் பணியில் மீனவர்களும், கடலோரக் காவல்படையினரும் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.