மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

லாரி ஓட்டுநரைக் கட்டிப் போட்டு கண்டெய்னர் லாரி கடத்தல்

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே லாரி ஓட்டுநரின் கண்கள் கைகளைக் கட்டிப்போட்டு, லாரியைக் கடத்திச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On :7 பிப்ரவரி 2014, 11:05 am

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே லாரி ஓட்டுநரின் கண்கள் கைகளைக் கட்டிப்போட்டு, லாரியைக் கடத்திச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து அரியலூர் சிமிண்ட் நிறுவனத்துக்குச் சென்றது லாரி. இடையில் உறக்கம் வரவே, லாலாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, ஓரத்தில் படுத்து உறங்கினார் ஓட்டுநர் முருகையா (29). இவர் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், அங்கே வந்த மர்ம நபர்கள் 4 பேர்,. அவரின் கண்கள் கைகளைக் கட்டி, லாரியை கடத்திச் சென்றனராம். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், லாலாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.