ஒகேனக்கல் குடிநீர்த் தொட்டிகளை கண்காணிக்க கேமிரா: ஆட்சியர் கே.விவேகானந்தன்
ஒகேனக்கல் குடிநீர் திட்ட தொட்டிகள், குழாய்கள், வால்வுகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்த ஆலோசனக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை


ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத் தொட்டிகளை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட உள்ளதாக ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.
ஒகேனக்கல் குடிநீர் திட்ட தொட்டிகள், குழாய்கள், வால்வுகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்த ஆலோசனக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, தலைமை வகித்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் பையர்நத்தம் நீர்த்தேக்கத் தொட்டியில் திங்கள்கிழமை குருனைமருந்து கலக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த உடன், நீர் வெளியேற்றப்பட்டு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அனைத்து குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குடிநீர்த் தொட்டிகள் உள்ள இடங்களில் சூரிய ஒளி மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் ஒவ்வொரு மாதம் 29-ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளில் ஒகேனக்கல் குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்திட வேண்டும். அனைத்து குடிநீர் தொட்டிகளையும் கண்காணிக்க கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில், குடிநீர் குழாய்களை சேதப்படுத்துவோர், குடிநீரில் குருனை மருந்து உள்ளிட்ட விஷ மருந்து கலக்க முற்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர்த் தொட்டிகளுக்கு மூடி போட்டு பூட்ட வேண்டும். காற்று செல்லும் குழாய்களில் வலை அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏணிக்கு கதவு அமைத்தல், சமநிலை நீர்த்தேக்க தொட்டியினை சுற்றி கம்பி வேலி ஆகிவற்றை அமைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் குடிநீர் குழாய் செல்வதால், உள்ளாட்சி அமைப்புக்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் போது, குழாய் பாதையை அறிந்து அதனை சேதப்படுத்தாமல் அமைக்க வேண்டும். மீறி குழாய்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை கண்காணிக்க ரோந்து செல்ல வேண்டும் என்றார் ஆட்சியர்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், ஒகேனக்கல் குடிநீர் திட்ட செயற்பொறியாளர் பி.மணிவண்ணன், அரூர் கோட்டாட்சியர் ஆர்.சந்திரசேகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் டி.ராமு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...