டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வீட்டில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியிருந்தவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி இருந்த பிரகாஷ்(22) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீஸார்

News image
Updated On :7 ஜனவரி 2014, 10:53 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி இருந்த பிரகாஷ்(22) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீஸார் திங்களன்று கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு பகுதியில் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த இருப்பது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகருக்கு தகவல் வந்தது.இதனைத் தொடர்ந்து  அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அங்கு பிரகாஷ் என்பவரின் வீட்டில் 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தார்.

தொடர்ந்து அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார் ரேஷன் அரிசி மற்றும் அதை பதுக்கி ஆந்திராவிற்கு கடத்த இருந்த பிரகாஷை திருவள்ளூர் மாவட்ட குடிமை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து குடிமை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.