நகைக்கடையை உடைத்து 7 கிலோ வெள்ளி திருட்டு

கரூர் நகர பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் கரூர் ஜவஹர் பஜாரில் சந்தானம் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரம்
Updated on
1 min read

கரூரில் வியாழக்கிழமை இரவு நகைக்கடையை உடைத்து 7 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூர் நகர பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் கரூர் ஜவஹர் பஜாரில் சந்தானம் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர் வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்து உள்ளே சென்ற போது, கடையின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடையினுள் பார்த்த போது அங்கிருந்த சுமார் 7 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது. இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த கடையை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜோஷிநிர்மல்குமார் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் தடவியல் நிபுணர்களும் கடையினுள் திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள கடையில் திருட்டுப்போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com