எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் வீட்டினர் உறங்கியபோது வீடு புகுந்து 55 பவுன் நகை கொள்ளை

காரைக்கால் நேரு நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் கமால் பாஷா. இவர், காரைக்காலில் டைல்ஸ் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சுலேகா, மாமியார் லத்திபா மூவரும் அவருடைய

News image
Updated On :18 ஜனவரி 2014, 5:03 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் நேரு நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் கமால் பாஷா. இவர், காரைக்காலில் டைல்ஸ் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சுலேகா, மாமியார் லத்திபா மூவரும் அவருடைய வீட்டில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து மாமியார் படுத்திருந்த அறைக்குள் நுழைந்து, 3 பீரோக்களில் ஒன்றின் பூட்டைத் திறந்து, 55 பவுன் நகைகளைத் திருடிவிட்டு, பூட்டின் சாவியைத் தூக்கியெறிந்து விட்டுச் சென்றுவிட்டனர்.

காலை கண்விழித்து எழுந்த மாமியார் லத்திபா, கமால் பாஷாவிடம் கூற, அவர் காரைக்கால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காரைக்கால் போலீஸார் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.