கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பெண் அடித்துக் கொலை

அதிராம்பட்டினம் காவல் சரகம், பள்ளிகொண்டான் புதுக்குளத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (35). இவர் மனைவி மலர்க்கொடி (30), மகன் பாலமுருகன் (11).  மலர்க்கொடியின் தங்கை மல்லிகா

News image
Updated On :19 ஜனவரி 2014, 11:03 am

பார்திபன்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே சனிக்கிழமை இரவு பெண் அடித்துக் கொல்லப்பட்டார்.

அதிராம்பட்டினம் காவல் சரகம், பள்ளிகொண்டான் புதுக்குளத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (35). இவர் மனைவி மலர்க்கொடி (30), மகன் பாலமுருகன் (11).  மலர்க்கொடியின் தங்கை மல்லிகா (28). விதவையான இவர் தனது 2 மகள்களுடன் அதே தெருவில் வசித்து வந்தார்.

குமார் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரங்கசாமி (55). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மாரியம்மாள், மகள் சாமுண்டீஸ்வரி, கோவிந்தராஜ், விஜய் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சாமுண்டீஸ்வரி கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.இதற்கிடையே குமாரும், சாமுண்டீஸ்வரியும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வருவார்களாம். இதனால் அவர்கள் இருவருக்குமிடையே கள்ளத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக குமார் குடும்பத்தினரை அடிக்கடி மாரியம்மாள் திட்டுவாராம். 

இந்நிலையில் சனிக்கிழமை இரவு குமார் மகன் பாலமுருகனை மாரியம்மாள் திட்டிப் பேசினாராம். அப்போது அங்கு வந்த மல்லிகா தேவையில்லாமல் சிறுவனை ஏன் திட்டுகிறீர்கள் என தட்டிக் கேட்டதால் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம்.இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி, அவரது மகன்கள் கோவிந்தராஜ், விஜய் ஆகிய மூவரும் மல்லிகாவை இரும்பு கம்பியாலும், கட்டையாலும் தாக்கி விட்டுத் தப்பினராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த மல்லிகா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக அதிராம்பட்டினம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ரங்கசாமி, அவரது மகன்கள் கோவிந்தராஜ், விஜய் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.