மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளி கொலை

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யாநகரைச் சேர்ந்த அந்தோனி மகன் சௌந்திரராஜன் (78). உப்பளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், வீட்டில்

News image
Updated On :20 ஜனவரி 2014, 9:52 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யாநகரைச் சேர்ந்த அந்தோனி மகன் சௌந்திரராஜன் (78). உப்பளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், வீட்டில் அருகேயுள்ள உப்பளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் செüந்திரராஜன் கொலை செய்யப்பட்ட நிலையில் திங்கள்கிழமை அதகாலை சடமாகக் கிடப்பது தெரிய வந்தது.

தகவல் கிடைந்ததும் தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் செüந்திரராஜனை அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் மூவர் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

கொலையுண்ட சௌந்திரராஜனும், அதே பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால், அந்தப் பெண்ணின் உறவிர்கள் மூவர் செüந்திரராஜனை உப்பளம் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.