கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மதுராந்தகம் அருகே கோமாரி நோய் பாதிப்பு 17 மாடுகளுக்கு தீவிர சிகிச்சை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டரை கிராமத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு, கால்நடைபராமரிப்புத்துறையின் மூலம் சிறப்பு முகாமில் தீவிர சிகிச்சையை

News image
Updated On :20 ஜனவரி 2014, 12:52 pm

குமார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டரை கிராமத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு, கால்நடைபராமரிப்புத்துறையின் மூலம் சிறப்பு முகாமில் தீவிர சிகிச்சையை  அளித்து வருகின்றனர்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தண்டரை கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாடுகளுக்கு வாயில் நுரை தள்ளல், காலில் புண் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து, தலைமையிடத்து இணை இயக்குநர் டாக்டர் அனந்தபத்மநாபன் தலைமையில் 7 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு நேரில் வந்து, நோய் தடுப்பு முன்னேற்பாடுகளை செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மாடுகளுக்கு ஏற்பட்ட புண்களுக்கு, பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், தடுப்பு ஊசிகள், அளிக்கப்பட்டது. கால்நடைபராமரிப்புத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். கால்நடைபராமரிப்புத்துறை மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், ஞாயிற்றுகிழமை பாதிக்கப்பட்ட 5 மாடுகள் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், மீதி உள்ள 12 மாடுகளுக்கு திங்கட்கிழமை மருத்துவர்கள் அளித்து வந்த சிகிச்சையால் நோயின் தீவிரநிலையில் இருந்து சற்று குணமாகி வருகின்றன.

 இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை உயர் அதிகாரி கூறுகையில், இப்பகுதியில் உள்ள மாடுகளை வெளியிடங்களில் இருந்து வாங்கி வந்துள்ளதுள்ளனர். அங்கிருந்து நோய் கிருமிகள் தொற்றி இங்குள்ள மாடுகளுக்கு பரவியுள்ளது. எத்தகைய மாடுகளும் இறக்கவில்லை. தற்சமயம் முற்றிலும் நோய் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாடுகள் ஒரிரு நாளில், முழுமையாக குணமடைந்துவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.