கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோபி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரிகள விற்பனை செய்து வருவதாக கோபி சார்ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரிக்கு புகார்கள்

News image
Updated On :29 ஜனவரி 2014, 11:11 am

குமார்

கோபி பகுதியில் உள்ள கடைகளை உணவு, பாதுகாப்பு துறை அலுவலர்கள்  புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

கோபி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரிகள விற்பனை செய்து வருவதாக கோபி சார்ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரிக்கு புகார்கள் சென்றுளளன.

இதைத் தொடர்ந்து கடைகளில் அதிரடி, சோதனை நடத்துவதற்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.கோபி மார்க்கெட் அருகே உள்ள வணிக வளாகத்தில் உள்ள 8 கடைகள் மற்றும் குடோன்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் புதன்கிழமை காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். காலை 5 மணி முதல் 7 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குட்கா, பான்பராக், ஹானஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு மொத்தமாக, சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோபி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து புகையிலை பொருட்களை வாங்கி செல்வதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாவட்ட உணவு பாதுகாப்பு  நியமன அலுவலர் கருணாநிதி, பாதுகாப்பு அலுவலர்கள் மனோகரன், முருகேசன், மணி, குழன்தைவேலு, செல்வன், சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.