தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்து 75 பேர் காயம்!

சிதம்பரம் அருகே வீராணம்ஏரிக்கரையில் உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித். இவரது உறவினர் கே.ஆடூர் கிராமத்தில் இறந்துவிட்டதால், ஊரிலிருந்து டிராக்டர் டிரெய்லரில் சுமார் 80

News image
Updated On :14 ஜூலை 2014, 1:15 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 60 பெண்கள் உள்ளிட்ட 75 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சிதம்பரம் அருகே வீராணம்ஏரிக்கரையில் உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித். இவரது உறவினர் கே.ஆடூர் கிராமத்தில் இறந்துவிட்டதால், ஊரிலிருந்து டிராக்டர் டிரெய்லரில் சுமார் 80 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது ஏரிக்கரை மெயின்ரோட்டில் குறுக்கே வந்த லாரிக்காக, ஏற்றமான இடத்தில் டிராக்டரை திடீரென நிறுத்திய போது பின்புறம் இருந்த டிரெய்லர் பள்ளத்தில் கவிழுந்த்தது.

இதில் டிராக்டர் டிரெய்லரில் பயணம் செய்த இந்திரா (33), மொட்டையன் (60), மலர்கொடி (50), ராணி (56), கலா (40), பெளனம்மாள் (42), லட்சுமி (50) உள்ளிட்ட 75 பேர் காயமுற்றனர். இதில் 60 பேர் பெண்கள் அடங்குவர். காயமுற்றவர்கள் அனைவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். காயமுற்றவர்களை சிதம்பரம் மண்டல துணை வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, வருவாய் ஆய்வாளர் கே.அசோகன் ஆகியோர் சென்று பார்வையிட்டு போதிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து ஆறுதல் தெரிவித்தனர். விபத்து குறித்து ஒரத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.