இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், மேற்படி நிலத்தை அகலப்படுத்தியது பலருக்கும் தெரியவில்லை. ஒரு ஏக்கர் மட்டுமே உள்ள சிலரது நிலத்தில் பாதிக்கு பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து ஆயக்குடி காவல்நிலையத்தில் புகார் செய்த போது போலீஸார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆகவே, மேற்படி நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், தாலுகா அலுவலகம், காவல்துறைக்கு புகார் செய்துள்ளோம். நிலத்தை மீண்டும் மீட்க பலஆயிரம் செலவிட வேண்டி உள்ளதால் இப்பணியை செய்தவர்களை மீண்டும் கற்களை அகற்றி சரிசெய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.