கிருஷ்ணகிரி அருகே நகைக்காக மூதாட்டி கொடூரக் கொலை
கிருஷ்ணகிரி அருகே திம்மாபுரி பகுதியில் 65 வயது மூதாட்டி நகைக்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


கிருஷ்ணகிரி அருகே திம்மாபுரி பகுதியில் 65 வயது மூதாட்டி நகைக்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திம்மாபுரியில் உயர்நிலைப் பள்ளி அருகே தங்கள் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வருபவர்கள் எல்லப்பன், உண்ணாமுலை (65) தம்பதி,.
இன்று அதிகாலை அவர்களின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி உண்ணாமுலையை தனியாகத் தூக்கிச் சென்று, அவரது கழுத்தில் கிடந்த நகைகளை எடுத்துக் கொண்டு, காதினை அறுத்து கம்மல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் கால்களில் அவர் அணிந்திருந்த வெள்ளிக்காப்பை கழற்ற இயலாததால், அவரது கால்களை துண்டித்து அவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
நகைக்காக மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இது குறித்து காவேரிப்பட்டினம் எஸ்பி கண்ணம்மாள் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...