சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சபா.சசிக்குமார் கைது

பணம் மோசடி வழக்கில் நீதிமன்ற பிடிவாரண்டு உத்தரவின் பேரில் கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளர் சபா.சசிக்குமாரை, அண்ணாமலைநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :6 மார்ச் 2014, 7:10 am

பணம் மோசடி வழக்கில் நீதிமன்ற பிடிவாரண்டு உத்தரவின் பேரில் கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளர் சபா.சசிக்குமாரை, அண்ணாமலைநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கன்னியாக்குமரி மாவட்டம் சூசைபுரத்தைச் சேர்ந்த கொச்சப்பநாடார் மகன் செல்லதுரை என்பவரிடம், சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சபா.சசிக்குமார் 2012-ம் ஆண்டு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ரூ.37 லட்சம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. சீட்டும் வாங்கித்தரவில்லை, கொடுத்த பணத்தை திருப்பித்தரவும் இல்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து செல்லதுரை நாகர்கோயில் விரைவு நீதிமன்றத்தில் பணம் மோசடி வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கில் ஆஜராகாமல் இருந்த சபா.சசிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நாகர்கோயில் விரைவு நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் பேரில் சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனா மற்றும் போலீஸார், சபா.சசிக்குமாரை வியாழக்கிழமை கைது செய்து நாகர்கோயில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.