சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் மண்டல தேர்தல் அலுலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். வட்டாட்சியர் எம்.விஜயா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதவிஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், தேர்தல் துணை வட்டாட்சியர் எம்.ஆறுமுகம், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் கஜேந்திரன், ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் ராஜவேலு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.