அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இளம்பெண் எரித்துக் கொலை: கணவர், மாமியாருக்கு ஆயுள் சிறை-சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம் பெண்ணை எரித்துக் கொலை செய்த அவரது கணவர், மாமியாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை அளித்து சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை

News image
Updated On :17 மார்ச் 2014, 1:36 pm

தங்கராஜா

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம் பெண்ணை எரித்துக் கொலை செய்த அவரது கணவர், மாமியாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை அளித்து சேலம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

 ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் ரமேஷ் (33). இவருக்கும் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுகந்தி (23) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார்.

 திருமணத்தின்போது ரமேஷூக்கு வரதட்சிணையாக 10 சவரன் நகையை சுகந்தியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். அதை சுகந்திக்கு தெரியாமல் அடமானம் வைத்து பணத்தை செலவு செய்த ரமேஷ், அதேபோல் கவரிங் நகையை வாங்கி வீட்டில் வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 இந்த விஷயம் சுகந்திக்கு தெரிய வந்ததில் இருந்து தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சுகந்தியிடம் கூடுதலாக வரதட்சிணை பெற்று வரும்படி ரமேஷூம் அவரது தாயார் அஞ்சலையும் கொடுப்படுத்தி வந்ததால், இருவர் மீதும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் சுகந்தி புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் கடந்த 21.9.2009 அன்று வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த சுகந்தியின் மீது ரமேஷூம், அஞ்சலையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

 இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராஜசேகர், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ரமேஷ், அஞ்சலை இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.