டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருச்சி வாத்தலை அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே இன்று காலை ஆட்டோவும் அரசு பஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.

News image
Updated On :17 மார்ச் 2014, 6:56 am

ராஜேஷ்

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே இன்று காலை ஆட்டோவும் அரசு பஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.

இதுகுறித்து போலீஸ்தரபில் கூறப்படுவதாவது:- திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயிலை சேர்ந்த கந்தன் மகன் திணேஷ்குமார் 27 இவர் ஆட்டோ ஒட்டுநர். அதேப்பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பாலு 28 இருவரும் இன்று அதிகாலை வாத்தலை அருகே உள்ள கிளிய நல்லூருக்கு ஆட்டோவில் சென்றனர்.

திருவாசி அருகே சென்ற போது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  2 பேரும் பலியாகினர். 

இதுகுறித்து வாத்தலை போலீஸார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.