சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருக்கு ஆதரவு கேட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், அருள்வேல், கிருபா ஆகியோர் தலைமையிலான சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ம.செ.சிந்தனைச்செல்வன், தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு ஆகியோர் பங்கேற்று, திருமாவளவனுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அரசியல் சூழல் குறித்தும் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, தமிழ்வளவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.