நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க உறுதியளித்து வாக்கு சேகரிப்பேன்: காங் வேட்பாளர் ப.வள்ளல்பெருமான்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கவும், எதிர்காலத்தில் ஜாதிக்கலவரம் வராமல் இருக்கவும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பேன் என மூன்று முறை எம்பியாக

News image
Updated On :22 மார்ச் 2014, 9:50 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கவும், எதிர்காலத்தில் ஜாதிக்கலவரம் வராமல் இருக்கவும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பேன் என மூன்று முறை எம்பியாக இருந்த சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம் ஜாதி ரீதியான கலவரம் ஏற்படும் மாவட்டமாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஜாதிக்கலவரம் வராமல் இருக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதி கூறியும், காங்கிரஸ் அரசின் சாதனைகளான உணவு பாதுகாப்பு திட்டம், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வீடு, சாலைவசதி, 108 ஆம்புலன்ஸ், கிராமப்புறங்களில் பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்து வாக்குகள் சேகரிப்பேன்.

தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனையினால் எவ்வித பாதிப்பும் கிடையாது. ஏற்கனவே 2009 நடைபெற்ற தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனையினால் காங்கிரஸிற்கு எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை. ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி வழிகாட்டுதலின்படி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டப்பணிகளை செய்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்கட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

அக்கட்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கரை கிடையாது. சிதம்பரம் தொகுதியில் 4 முனைப் போட்டி நடைபெறுகிறது. மூன்று முறை எம்பியாகவும், ஒருமுறை எம்எல்ஏவாகவும் இருந்த நான் பாகுபாடின்றி அனைத்து கட்சியினருக்கும், சமுதாயத்தினருக்கும் சேவை செய்துள்ளேன். ஆதலால் சுமார் 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

வாக்குறுதிகள்: நிலம் கையக்கப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் மின்உற்பத்தி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். பெரம்பலூர்- சிதம்பரம் தடத்தில் புதிய ரயில் பாதை அமைக்கவும், சிதம்பரம்- காட்டுமன்னார்கோயில் வழியாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இருவழி சாலையாக மாற்றவும், பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் சீரமைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளிடம் ஆற்றில் தடுப்புசுவர் அமைக்கவும்,

கடல்நீர் உட்புகாமல் தடுக்க கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் தடுப்பணைகள் அமைக்கவும், பரங்கிப்பேட்டை துறைமுகத்தை மீண்டும் செயல்படுத்தவும், சிதம்பரம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கவும், புதுச்சேரியிலிருந்து சிதம்பரம் வரை உள்ள பக்கிங்காம் கால்வாயை தூர்வாரவும், நெய்வேலியில் முதலை பண்ணை அமைத்து, மக்களை அச்சுறுத்தி வரும் முதலைகளை அங்கு கொண்டு விடவும் நடவடிக்கை எடுப்பேன் என டாக்டர் ப.வள்ளல்பெருமான் தெரிவித்தார். பேட்டியின் போது முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிஸ் கமிட்டி துணைத்தலைவர் செந்தில்குமார், பாரதியார் வங்கி இயக்குநர் துரை.பாலசந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.