தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க விஸ்வகர்ம விருது வழங்கும் விழா சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் பி.முத்துக்குமார் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் எம்.கோவிந்தராஜ், சி.ஏகாம்பரம், ஆர்.பாவாடைபத்தர், எஸ்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க மாநில செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். சங்க மாநிலத் தலைவர் ஜி.சேகரின் சமூக சேவையை பாராட்டி விஸ்வகர்ம சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் ஏ.நடராஜன், எஸ்.மோகன், எஸ்.ராமலிங்கம், எஸ்.பாலசுப்பிரமணியன், கே.சி.ராஜாராம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.