சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு


சிதம்பரம் சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்குள் புகுந்த 7 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் தலைமையில் களப்பணியாளர்கள் விரைந்து சென்று சுமார் 7 அடி நீளமுள்ள, சுமார் 600 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் மினிலாரி மூலம் முதலையை அருகாமையில் உள்ள வாக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விடப்பட்டது. இதே சிவாயம் கிராமத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி நீரின்றி உள்ள வடக்குராஜன் வாய்க்காலில் பொதுமக்களை அச்சுறுத்திய 10 அடி நீள ராட்சத முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
இந்த வாரத்தில் இதுவரை பொதுமக்களை அச்சுறுத்திய 3 முதலைகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...