நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு

News image
Updated On :23 மார்ச் 2014, 10:58 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்குள் புகுந்த 7 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் தலைமையில் களப்பணியாளர்கள் விரைந்து சென்று சுமார் 7 அடி நீளமுள்ள, சுமார் 600 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் மினிலாரி மூலம் முதலையை அருகாமையில் உள்ள வாக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விடப்பட்டது. இதே சிவாயம் கிராமத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி நீரின்றி உள்ள வடக்குராஜன் வாய்க்காலில் பொதுமக்களை அச்சுறுத்திய 10 அடி நீள ராட்சத முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

இந்த வாரத்தில் இதுவரை பொதுமக்களை அச்சுறுத்திய 3 முதலைகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.