நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அல்ல, அமைச்சர்கள் மாற்றம்தான் நடைபெற்று வருகிறது: மு.க.ஸ்டாலின்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டுமென ஜெயலலிதாவை வெற்றி பெறச்செய்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால் ஆட்சி மாற்றம், அமைச்சர்கள் மாற்றமாகதான் உள்ளது

News image
Updated On :23 மார்ச் 2014, 1:41 pm

ஜி.சுந்தரராஜன்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டுமென ஜெயலலிதாவை வெற்றி பெறச்செய்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால் ஆட்சி மாற்றம், அமைச்சர்கள் மாற்றமாகதான் உள்ளது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த நாட்டிற்காக உழைப்பவர்கருணாநிதி. ஆனால் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா சீசனுக்கு, சீசன் வருவது போல, தேர்தலுக்கு, தேர்தல்தான் மக்களை சந்திக்க வருகிறார். போயஸ் போட்டத்திலிருந்து புறப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் இங்கு வந்து கூட்டத்தில் படித்து விட்டு போய் இருக்கிறார். ஹெலிகாப்டரில் வருவதற்கு ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு. கருணாநிதி முதல்வராக இருந்த போது ஸ்காட்டுலாந்துக்கு பிறகு தமிழக காவல்துறை இரண்டாம் இடத்தில் இருந்தது. இப்போது வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பு. முதல்வருக்கு பாதுகாப்பு தருவது தவறில்லை. ஹெலிகாப்டரில் வருபவதற்கு ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு தேவையில்லை.

இன்று காலை பத்திரிகை ஒன்றில் கடலூரில் முதல்வர் ஜெயலலிதா பொதுக்கூட்டத்திற்கு மின்கம்பத்திலிருந்து மின்சாரத்தை திருடி பயன்படுத்தியுள்ளதை படம் எடுத்து போட்டுள்ளனர். நான் ஆதாரத்துடன் பேசுகிறேன். ஏனென்றால் எதையாவது பேசி என் மீது வழக்கு போட்டுவிடுவார்கள், திருமாவளவன் மீது வழக்குப் போட்டு விடுவார்கள். திருவாவளவன் மீது எவ்வளவோ வழக்கு இருக்கு அது வேறு. வழக்குகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சுபவர்கள் அல்ல. நாங்கள் பனங்காட்டு நரிகள், சல சலப்புகளுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல.

திமுக பொறுத்தவரை கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தபோது. நாட்டிற்கு, ஏழை, எளிய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறுபான்மைய சமுதாய மக்களுக்கு என்னிப்பார்க்க முடியாத சாதனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக 2006-11 ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில், இந்திய நாட்டில் எந்த முதல்வராலும் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை செய்து முடித்துள்ளார். இந்த தொகுதியில் ரயில்வே மேம்பாலம் கருணாநிதி காலத்தில் அமைக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டடங்கள், புறநோயாளிகள் கட்டடம், அறுவை சிகிச்சைகள் கட்டடம், மகப்பேறு மருத்துவப்பிரிவு, கூடுதல் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பி.முட்லூர் ஆரம்ப சுகாராத நிலையம், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை, ஒரத்தூர், கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டங்கள் கட்டப்பட்டுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா சட்டப்பேரவையில் ஏறக்குறைய 110 விதிகளின் கீழ் 300 அறிக்கைகளை படித்துள்ளார். 110 விதியை எதற்கு பயன்படுத்த வேண்டுமென்றால், ஏதாவது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டால், நடக்கக்கூடாது சம்பவம் நடைபெற்றாலோ, அதுகுறித்து 110 விதியை பற்றி முதல்வரோ அல்லது அமைச்சர்களோ பேசலாம். அப்போது யாரும் குறுக்கே பேசக்கூடாது என்பதுதான் அதன் சிறப்பு அம்சம். கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்த போது குறைந்தது 20 அல்லது 25 முறைதான் பயன்படுத்தியுள்ளார். எம்ஜிஆர், காமராஜர், பக்தவக்சலம், அண்ணா முதல்வராக இருந்திருக்கிறார். தேவைப்படும் போதுதான் 110 விதியை பயன்படுத்தி அறிக்கை படித்துள்ளனர். ஆனால் ஜெயலலிதா நிதிநிலை அறிக்கையில் சொல்லக்கூடியதை 110 விதியின் கீழ் படிக்கிறார். ஆளுநர் உரையில் உள்ளது பற்றி 110 விதியின் கீழ் படிக்கிறார். நேரமில்லா நேரம் திட்டத்தையே மாற்றி, யாரும் குறுக்கே பேசக்கூடாது. சட்டப்பேரவையில் முதல்வரை புகழ்ந்து பேசினால்தான் பேச முடியும். குறையே சொல்லக்கூடாது. அப்படியே மீறி பேசினால் வெளியேற்றி விடுவார்கள். நாங்கள் மறுத்தால், தூக்கிவிட்டு வந்து வெளியே போட்டுவிடுவார்கள்.

சிதம்பரம் தொகுதிக்கு ஒன்றை 110 விதியில் படித்தார்கள். 15-2-2013 அன்று சட்டப்பேரவையில் ஏழை, எளியவர்கள், அடக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை மேப்படுத்த போராடிய சுவாமி சகஜானந்தாவிற்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். 2013 ஆண்டு 5-ம் மாதம் அறிவித்தார். ஆனால் இதுவரை அந்த கட்டடம் கட்டுவதற்கு முயற்சி இல்லை. 300 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தேர்தல் ஜெயலலிதா வந்து மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.

மத்திய அரசில் பங்கேற்ற திமுக எதையும் செய்யவில்லை என ஜெயலலிதா வாய்கூசாமல் சொல்லுகிறார். திமுக என்ன செய்திருக்கிறது என்பதை ஜெயலலிதா சாலை வழியாக சென்றால் சாலையை பார்க்கலாம், பாலத்தை பார்க்கலாம், கட்டத்தை பார்க்கலாம். ஹெலிகாப்டரில் போனால் பார்க்கலாம். எதை பற்றி சிந்திப்பதில்லை, யாரையும் பார்ப்பதில்லை, ஆனால் அவருக்கு பிடித்த யானையை பார்க்க போனார். நீ யாரையும் பார்க்க மாட்டே, என்னை மட்டும் பார்க்க வந்தாய் என யானை முட்டித்தள்ளிவிட்டது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா ஆட்சி உள்ளது. அதுமட்டும் இல்லை, அதிமுக ஆட்சியில் அவலங்களில் ஒன்றான சிறுப்பான்மையினர் உட்பட அரசு கல்லூரிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு, ஒரு பணியிடத்திற்கு 3 லட்சத்திற்கு 50 ஆயிரம் பணம் கட்டினால்தான், அந்த பணியிடம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

கல்வியை பற்றி இதே சிதம்பரத்தில் ஜெயலலிதா பேசிவிட்டு சென்றுள்ளார். கல்வி அமைச்சரை எத்தனை பேரை மாற்றியுள்ளார்கள். மாற்றம்,மாற்றம் என்று சொல்கிறார்கள். ஆட்சிக்கு வரும் போது மாற்றத்தை நம்பிதான் நீங்களும் வாக்களித்தீர்கள். ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்து ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள். ஆனால் மாற்றம் மக்களுக்குரிய பிரச்சனையா, இல்லை. அமைச்சர்கள் மாற்றம்தான் ஜெயலலிதா ஆட்சியல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறதே தவிர வேறு மாற்றம் இல்லை. திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது சமச்சீர்கல்வி திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டத்தை அடியோடு ரத்து செய்து சட்டப்பேவையில் தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் அணுகி திட்டத்தை ரத்து செய்தது தவறு என தீர்ப்பு வந்த காரணத்தினால், இந்த சமச்சீர் கல்வி வந்துள்ளது. அதற்கு காரணம் கருணாநிதிதான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. பல திட்டங்கள சாதனைகளை நிறைவேற்றயது கருணாநிதி ஆட்சி. ஜெயலலிதா இந்த 3 ஆண்டு காலத்தில், இந்த திட்டங்கள் செய்தேன் என சொல்லக்கூடிய நிலை இல்லை.  தமிழகத்தில் கருணாநிதி 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் ஜெயலிலதா 110 திட்டத்தை கொண்டு வந்து, தமிழக மக்களின் முகத்தில் 111 போட்டு வருகிறார்.

தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சிதான் உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. பகலிலேயே பெண்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற, மத்தியில் நாம் இருக்கிற ஆட்சி அமைய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமாவளவனுக்கு வாக்களியுங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.