சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் அருகே அரசு பஸ், கார் மோதல்: பெண் சாவு, மூவர் காயம்

சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், பொலிரோ காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். மூவர் காயமுற்று சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News image
Updated On :26 மார்ச் 2014, 7:57 am

சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், பொலிரோ காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். மூவர் காயமுற்று சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலையில் தீர்த்தாம்பாளையம் எனுமிடத்தில் வெள்ளாற்று பாலம் அருகே புதன்கிழமை அதிகாலை பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரிலிருந்து வந்த பொலிரோ கார், முன்புறம் மோட்டார் சைக்கிளில் சென்ற புளி வியாபாரி மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, எதிரே கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த புதுச்சேரி அரசு பேருந்து மீது மோதி்யது.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த ஷாகீர் மனைவி ஷைலா (50) சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் பயணம் செய்த டிரைவர் அசருதீன் (21), ஷாகீர் (55), முகமதுயாகூப் (64), ஜெகதார்நாச்சியார் (55) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நால்வரும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டுக்கோட்டை மதுக்கூரிலிலிருந்து பொலிரோ காரில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஷாகீர் குடும்பத்துடன் சென்றதாக தெரியவருகிறது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.