அப்போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவலர் நடராஜனை, மூவரும் ஆபாசமாக திட்டு தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது இதில் காவலர் நடராஜனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் இருவரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் கொத்தங்குடித்தெருவைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நடராஜன், கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் ரஜினிகாந்த் மற்றும் 2 பேர் மீது போலீஸாரை ஆபாசமாக திட்டி பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.