தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் என்பதால் தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டு, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னையில் 6 மையங்கள் உள்பட தமிழகத்தில் மொத்தம் 39 மையங்களில் இந்தத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 194 பேருக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.