6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 2 மையங்களில் 183 பேர் எழுதினர்

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் என்பதால் தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம்

News image
Updated On :21 மே 2014, 10:42 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 மையங்களில் மொத்தம் 183 பேர் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதினர்.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் என்பதால் தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டு, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னையில் 6 மையங்கள் உள்பட தமிழகத்தில் மொத்தம் 39 மையங்களில் இந்தத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 194 பேருக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, சாராள்டக்கர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனுமதிச்சீட்டு பெற்றவர்களில் 183 பேர் மட்டுமே தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதினர்.தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பள்ளிகளில் இன்று பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களும் விநியோகிக்கப்பட்டதால் கூடுதலாக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு தேர்வு எழுத வருவோருக்கு இடையூறு இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. தேர்வினை மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் நேரில் சென்று கண்காணித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.