ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அவர், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சியை விட்டுச் சென்றதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. 10 ஆண்டுகளாக குறிப்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை தேசிய அளவிலான கட்சிப் பதவிகள், மந்திரி பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, கட்சி ஆட்சியில் இல்லை என்பதற்காக தலைமை மீது குறை கூறுவது அபத்தமானது.
ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஓராண்டு இருந்தார்.