டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து-லாரி மோதல்: ஒருவர் சாவு: 5 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :23 நவம்பர் 2014, 6:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மூன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்துக் கழக அலுவலகத்தை அடுத்து பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே மதுரையிலிருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி பேருந்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. லாரி எதிர் புறத்திலிருந்த மரத்தில் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரில் சேவுக்கடை வைத்துள்ள க.முப்பிடாரி (24) என்பவர் உயிரிழந்தார். இவருடன் வந்த இவரது தம்பி சரவணக்குமார், ராஜபாளையம் துப்புரவு தொழிலாளர் பேச்சியம்மாள், அரசு பேருந்து ஓட்டுநர் முருகன் (42), நடத்துனர் சங்கர் (40) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த மதுரை மாவட்டம், சோழவந்தான் தாலுகா விக்ரமங்கலத்தைச் சேர்ந்த விஜயன் (30) என்பவர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் முருகன், வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் லாரி டிரைவர் விஜயன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தினால், ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் குறைந்த அளவே பயணிகள் இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.