பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருமண ஆசை காட்டி தன்னை சீரழித்ததாக வாலிபர் மீது இளம்பெண் புகார்

திருமண ஆசை காட்டி தன்னை சீரழித்ததாக கூறி கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பத்தை சேர்ந்த தமிழ்செல்வி(22) என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த முதுநிலை பட்டதாரி மாணவர் பிரபுதாஸ் என்கிற

News image
Updated On :26 நவம்பர் 2014, 11:53 am

பா.ஜான்பிரான்சிஸ்

திருமண ஆசை காட்டி தன்னை சீரழித்ததாக கூறி கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பத்தை சேர்ந்த தமிழ்செல்வி(22) என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த முதுநிலை பட்டதாரி மாணவர் பிரபுதாஸ் என்கிற தினகரன்(28) என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் கும்மிடிப்பூண்டியில் ஒரு மருத்துமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவரின் மகனான முதுநிலை பட்டதாரி பிரபுதாஸ் என்கிற தினகரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு கொண்டதாகவும் இது குறித்து பிரபுதாஸின் குடும்பத்தாரின் தெரிவித்த போது அவர்கள் 50 பவுன் நகை, 1 லட்சம் வரதட்சணை தந்தால் திருமணம் செய்து வைப்பதாக கூறினார்கள் என இவர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகாபாய்  பிரபுதாஸை கைது செய்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து பிரபுதாஸ்  நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.