டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த போலீஸார் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ராஜாராம் (31). இவர் சிவகாசியில் உள்ள தனி ஆயுதப்படையில் போலீஸாராக உள்ளார். வேலைக்குச் செல்வதற்காக தனது இரு

News image
Updated On :27 நவம்பர் 2014, 1:28 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த போலீஸார் படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ராஜாராம் (31). இவர் சிவகாசியில் உள்ள தனி ஆயுதப்படையில் போலீஸாராக உள்ளார். வேலைக்குச் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில், கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பட்டத்தரசியம்மன்கோவில் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததையடுத்து நிலை வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமுற்ற அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.