கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆலங்குடி அருகே இரு வீடுகளில் 34 பவுன் திருட்டு

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(35).தனியார் நிறுவன ஊழியரான இவர் மனைவி சாந்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை

News image
Updated On :2 செப்டம்பர் 2014, 12:48 pm

பார்திபன்

ஆலங்குடி அருகே பூட்டப்பட்டிருந்த இரண்டு வீடுகளில் 34 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(35).தனியார் நிறுவன ஊழியரான இவர் மனைவி சாந்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு  திங்கள்கிழமை உறவினரின் திருமண விழாவிற்கு அறந்தாங்கி சென்றுள்ளார்.   இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் கணேசனின் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து வீட்டிற்கு வந்த கணேசன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 30 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.  

இதேபோல திருவரங்குளம் ஒன்றிய அலுவலகச் சாலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). டீகடை நடத்தி வருகிறார்.இவரும் இவரது மனைவி மீனாளும்  திருவரங்குளம் கோயில் தேரடி வீதியில் உள்ள இவரது டீ கடையில் திங்கள்கிழமை இரவு தூங்கிவிட்டனராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.அப்போது பெட்டியில் வைத்திருந்த 4 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு வந்த ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சொக்கநாதன், காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

திருவரங்குளத்தில் ஒரே இரவில் சுமார் 300 மீட்டர் தொலைவிற்குள் இரண்டு வீடுகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.