தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குப்பை தொட்டியில் குழந்தை - அகதிகள் முகாமில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வெள்ளிக்கிழமை இரவு குப்பை தொட்டியில் குழந்தை ஒன்று அழுகுரல் கேட்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இது குறித்து

Updated On :27 செப்டம்பர் 2014, 11:49 am

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குப்பை தொட்டியில் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை காணப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வெள்ளிக்கிழமை இரவு குப்பை தொட்டியில் குழந்தை ஒன்று அழுகுரல் கேட்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இது குறித்து அக்கம்பக்கத்தாரிடம் தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து தகவல் அறிந்து சிப்காட் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலுசாமி அப்பகுதி மக்களிடம் இது குறித்து விசாரித்ததோடு அந்த குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.

தொடர்ந்து அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் அந்த குழந்தை கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பாலகுண்டராஜா-தெய்வானை தம்பரியரின் குழந்தை என விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் அந்த குழந்தை எப்படி குப்பை தொட்டிக்கு வந்தது என்பது குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிóன்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.