இச்சம்பவம் குறித்து பல்கலைக்க்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தேர்வுத்துறை விடைத்தாள்கள் திருடிய வழக்கில் கடலூர் ரெளலத்நகரைச் சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மைய வரலாற்று பிரிவு உதவிப் பேராசிரியர் சி.பாஸ்கர் (35), அலுவலக உதவியாளர்கள் சி.கொத்தங்குடித்தோப்பைச் சேர்ந்த எம்.ராமசாமி (32), சி.கொத்தங்குடித்தோப்பைச் சேர்ந்த எஸ்.மாரிமுத்து (33), சிதம்பரம் வி.எஸ்.ஆர் நகரைச் சேர்ந்த ஏ.சங்கர் (41), மேலகீரப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), என்.பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ஆனந்த் (33) ஆகிய 6 பேரை அண்ணாமலைநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பிரசன்னா, பிரபாகரன் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.