கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு இணையதளத்தில் சலுகை டிக்கட் வழங்க வேண்டும்: மாற்றுத் திறானாளிகள் சங்கம்

முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ளது போல் இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணத்தில் ரயில்டிக்கட் பெற மத்திய, மாநில அரசுகள் வசதி

News image
Updated On :11 ஏப்ரல் 2015, 3:01 pm

ஜி.சுந்தரராஜன்

முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ளது போல் இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணத்தில் ரயில்டிக்கட் பெற மத்திய, மாநில அரசுகள் வசதி செய்து தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறளானிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி கூட்ட அரங்கில் தமிழ்நாடு அனைத்து வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை வகித்துப் பேசினார். மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ராஜா, நிர்வாகிகள் ராமகுமார், எழில்நிலவன், வீரமணி, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலையில் அனைத்து கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தளம், மூன்று சக்கர வாகனம், நவீன கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்; கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க அரசாணைப்படி மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்; நகராட்சி மற்றும் பேரூராட்சி

பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யோக கழிப்பறைகள் இல்லை. எனவே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.