மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்க விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக 2015-16 ஆண்டிற்கான விண்ணப்பி விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2015, 9:50 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக 2015-16 ஆண்டிற்கான விண்ணப்பி விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் முனைவர் ஜே.வசந்தகுமார், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் ராம.சந்திரசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அ.ரகுபதி மற்றும் புத முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 1014-15 கல்வி ஆண்டு தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 565 பேர் அனுமதி சேர்க்கை செய்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் சேர்வார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தினோம். சுமார் 66 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்னர். இந்த ஆண்டு தொலைதூரக்கல்வி இயக்க புத்தகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்கள் வைக்கப்பட்டு சுமார் 460 மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் முதன் முறையாக இந்த ஆண்டு முதல் மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் கிரடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி அனுமதி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பாடங்கள்: தொலைதூரக்கல்வி இயக்கத்தில் முதுகலை டிப்ளமா இன் தமிழ்பண்டிட், ஆண்டிராய்டு படிப்பு உள்ளிட்ட 3 புதிய படிப்புகள் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலையில் ரெகுலர் முறையில் எம்.ஏ கிளாச்சிக்கல் தமிழ் 2 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதிலும் பயிலும் 20 மாணவர்களுக்கு மத்திய செம்மொழி நிறுவனம் தலா ரூ 3 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் அறிவியல் புலத்தில் முதுகலை டிப்ளமா இன் கிளினிக்கல் பயோ-கெமிஸ்டரி மற்றும் மெடிக்கல் லேப்-டெக்னீஷியன் படிப்புகள் தொடங்கப்படவுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.