மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் பணிஇடை நீக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் பணிஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பு பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2015, 3:17 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் பணிஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பு பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.

பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பல்கலைக்கழக நிதிமுறைகேடுகள் குறித்து தமிழகஅரசு லஞ்சஒழிப்புத்துறை மற்றும் விஜிலென்ஸ் போலீஸ் விசாரணையும், ராஜா முத்தையா பல்மருத்துவக்கல்லூரி அனுமதி சேர்க்கையில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணை வளையத்தில் உள்ள அப்போதிருந்த பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் வியாழக்கிழமை அன்று பணி ஒய்வுபெறுகிறார்.

இந்நிலையில் தமிழகஅரசு உயர்கல்வித்துறை செயலர் விசாரணை நிலுவையில் உள்ளதால், அவரை பணிஇடைநீக்கம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பணிஓய்வுபெறும் ஒருநாள் முன்பு முன்னாள் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரத்தை, தற்போதைய பதிவாளர் ஜே.வசந்தகுமார் பணிஇடைநீக்கம் செய்து புதன்கிழமை ஆணை பிறப்பித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.