மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜயேந்திரர் மற்றும் இலங்கை மந்திரி சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இலங்கை மந்திரி டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர்

News image
Updated On :30 ஏப்ரல் 2015, 3:22 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இலங்கை மந்திரி டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் (மே.1-ம் தேதி) இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திரர், ஸ்ரீவிஜயேந்திர் ஆகியோர் சிதம்பரத்தில் வி.எஸ்.டிரஸ்ட் சத்திரத்தில் முகாமிட்டுள்ளனர். வியாழக்கிழமை மாலை காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் யாகசாலை பகுதிக்கு பூஜைகளை பார்வையிட்டு தரிசித்தனர். அதேபோன்று இலங்கை இந்து சமய அமைச்சரும், இந்து மறுவாழ்வுத்துறை அமைச்சருமான டி.எம்.சுவாமிநாதன் நடராஜர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, யாகாசைலை பூஜைகளை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.

ஐஜி கண்ணப்பன் ஆய்வு: சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேக பணிகளை வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஐஜியுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா உடன் சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.