31-இல் செவிலிய பட்டயப்படிப்புக்கான கலந்தாய்வு

செவிலிய பட்டயப்படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்க உள்ளது.

செவிலிய பட்டயப்படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்க உள்ளது.

 சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

 ஆகஸ்ட் 31-ஆம் தேதி முற்பகல் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறும். பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

 இதில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் தனித்தனியாக ஒவ்வொரு மாணவருக்கும் அனுப்பப்ட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் செயலாளர், தேர்வுக்குழு என்ற பெயரில் ரூ.200-க்கு எடுக்கப்பட்ட வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com