தற்போதைய செய்திகள்
சோவிடம் சரத்குமார் நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர் சோவை சமூக சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர் சோவை சமூக சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
மூச்சுத் திணறல், சளிப் பிரச்னை காரணமாக பத்திரிகையாளர் சோ ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோவை சமூக சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.